Friday, October 4, 2013

தங்களின் மேலான கவனத்திற்கு!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த பதினைந்து வருடங்களாக பல்வேறு பி.எஸ்.என்.எல் பயிற்சி மையங்களில் மனிதவள மேம்பாட்டு துறை சம்பந்தப்பட்ட வகுப்புகளை கையாண்டு வந்துள்ளேன். மேலாண்மை வகுப்புகள் நடத்துவதே எனது குறிக்கோள். எனது கனவுகள் நினைவாக இன்று முதல் "Catalyst - Igniting Growth" என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சமூக நல அமைப்புகள்/மையங்கள் போன்றவற்றில் தமிழிலும், ஆங்கிலத்திலும் விருந்தினர் உரை, சொற்பொழிவு, மேலாண்மை நோக்குநிலை கருத்தரங்குகள் நடத்த உள்ளேன்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளின் மூலம் என்னுடைய வலைப்பதிவுக்கு சென்று, படித்துப் பார்த்து அதனை உங்களின் நண்பர்களுடனும், தெரிந்தவர்களுடனும் பகிருங்கள்.

http://catalystignitinggrowth.blogspot.in/

https://www.facebook.com/pages/Catalyst-Igniting-Growth/454022301379929 (Click “Like” on this page)

உங்களுக்கு தெரிந்த இடங்களில் (அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் /மையங்கள்) எனக்கு பரிந்துரை செய்யுங்கள். உங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும், நல்லாசியும் எனக்கு என்றும் உண்டு என்று நம்பும்,
சண்முகசுந்தரம்.


No comments:

Post a Comment