Thursday, December 1, 2011

எஸ்.எம்.எஸ். தத்துவங்கள்

வாழ்க்கை என்பது பனைமரம் போன்றது. ஏறினால் நுங்கு; விழுந்தால் சங்கு.

7 பரம்பரைக்கு உட்காந்து சாப்பிட வசதி இருந்தாலும், பாஸ்ட் புட் கடையில நின்னுதான் சாப்பிடனும்.

லைப்ல ஒன்னும் இல்லேன்னா போர் அடிக்கும்; தலையில ஒன்னும் இல்லேன்னா கிளார் அடிக்கும்.

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவனை துப்பாக்கிகுள்ள போடமுடியுமா?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரல்லதான் பேச முடியும்.

அருகில் இருந்தும் பேச முடியவில்லை; உரிமை இருந்தும் கேட்க முடிய வில்லை. (எக்சாம் ஹாலில்) - என்ன கொடுமை சார் இது?

பயம்தான் தோல்விக்கு முக்கிய காரணம். அதனால தயவு செய்து கண்ணாடிய பாக்காதீங்க.

நம்ம அடிச்சா அது மொட்டை; அதுவா விழுந்தா அது சொட்டை.

க்ரீம் பிஸ்கட்டுல க்ரீம் இருக்கும்; நாய் பிஸ்கட்டுல நாய் இருக்குமா?

"dye " னா மண்டையில போடறது; "die" னா மண்டைய போடறது.

தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி.

காலண்டருல நாம எந்த தேதிய கிழிச்சோம்கிறது முக்கியம் இல்ல. கிழிச்ச தேதியில நாம என்ன கிழிச்சோம்கிறது தான் முக்கியம்.

சவுத் இந்தியாவில நார்த்தங்காய் கிடைக்கும்; ஆனா நார்த் இந்தியாவில சௌத்தங்காய் கிடைக்குமா?

என்னதான் கருணாநிதி DMK வுல இருந்தாலும், அவர் வீட்டு மாடு 'அம்மா' ன்னு தான் கத்தும்.

எலிபென்ட் மேல நம்ம உட்காந்தா அது சவாரி; எலிபென்ட் நம்ம மேல உட்காந்தா ஒப்பாரி தான்!

கீ ரோஸ்ட்ல கீ இருக்கும், ஆனா பேப்பர் ரோஸ்ட்டுல பேப்பர் இருக்குமா?

கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும்; கோவில் மணி ல்ல நம்ம அடிச்சா ரத்தம் வரும்.

மாடு முன்னாடி போனால் முட்டும்.
பிகர் பின்னாடி போனால் திட்டும்.
ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது கஷ்டம்.

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை..
அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....