Tuesday, August 26, 2014

டாக்டருக்கு படிச்சா போதுமா?

ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார்.
.
பக்தர் ஒருவர் அவரிடம், ""ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?,'' என்று கேட்டார்.
.
ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்,''.
.
நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,'' என்றார் பக்தர்.
.
ராமகிருஷ்ணர் அவரிடம்""நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
.
""டாக்டர்'' என்றார் வந்தவர்.
.
""அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்,'' என்றார் ராமகிருஷ்ணர்.
.
""எப்படி முடியும்? படித்தால் தான் முடியும்,'' என்றார் வந்தவர்.
.
""படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் "பக்தி' என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள்,'' என்றார் ராமகிருஷ்ணர்.

Thursday, August 7, 2014

வெங்காயக் கதை!

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம். ஒரு நாள் மூணு பேரும் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம். தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம். வீட்டுக்கு அழுதுகிட்டே வர வழியில லாரியில அடிபட்டு தக்காளி நசுங்கி செத்துப் போச்சாம். உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கான்னு கேட்டுச்சாம். அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்! அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதாம்..!!