Tuesday, August 28, 2012

மிருக வைத்தியர்

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.   பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள்,   "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.
 
என்னது மிருக டாக்டர்கிட்டேயா
? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரிலபக் லபக்னு ரெண்டு வாய் தின்னுட்டு , பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
 
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க
! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க!   வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே   நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டைசரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!   இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,   மனைவி சொன்னள்   ` கோட்டான் மாதிரி முழிக்காதீங்க '

Saturday, August 11, 2012

அறிவின் முதிர்ச்சி


ஒரு சமயம்  விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அப்போது அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் ஒரு அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.


அவள் விவேகானந்தரிடம், "நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா?" என்று கேட்டாள்.

"என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது?" என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே, "என்னை மணந்து என்னைப் போலவே மகனை பெற்றுக் கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன். இன்று முதல் நன் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன்" என்று.

இதுதான் அறிவின் முதிர்ச்சி.

ஒருவரது கருத்தை மறுக்கும் பொழுதுகூட, அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....