Wednesday, July 24, 2013

தங்கத் தலைவர் காமராஜர்!

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் .
அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில்
ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம்
சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.


பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்து விட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள்பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை, லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .



.....................


தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமராஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார்.
 

ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர், காமராரின் தாய் சிவகாமி அம்மாள்
அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது,  அவர் மிகவும் வருத்ததுடன்
சொன்னது :  " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல. என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல, அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க, அதற்கு காமராஜர் சொன்ன பதில் :
 

"அடப்போப்பா, எனக்கு தெரியாதா அம்மாவை அப்படியே கூட்டிட்டு வந்தாலும் தனியாவா வருவாங்க?  அவங்க கூட நாலு பேரு வருவான். அப்புறமா அம்மாவை பாக்க, ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவாங்க.  இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரம் பண்ணுவான். எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு
வச்சிருக்கேன்." என்றார்.

No comments:

Post a Comment