Wednesday, November 30, 2011

நகைச்சுவை

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை மாதிரி இருந்தாலும்,
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும். அம்மா அடிச்சா வலிக்கும். ஆனால் சைட் அடிச்சா வலிக்காது.


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..!

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..?

நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்! உன் பொண்டாட்டியையா..?
இல்ல... சைக்கிளை

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளிகேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கணும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?
தெரியாதே!
அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு.... ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்

உங்க மாமா டெல்லிக்குப் போனாரே... அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.

போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?
’தபால்’-ன்னு விழுவார் !

No comments:

Post a Comment