Tuesday, November 29, 2011

மேனேஜரிடம் 10 கேள்விகள்..

மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்....
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுன்னு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலை
ன்னா Dont make it too complicatedன்னு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbன்னு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது
Happy Weekend
ன்னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலை
ன்னா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைன்னா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைன்னு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ
உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்
ன்னு உங்களுக்கு தெரிய மாட்டேங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...

6.. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலை
ன்னா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுன்னு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க...?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issue
ன்னு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workன்னு சொல்றீங்க...?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்டேறான்னு
சொல்றீங்க...?

9. சாயந்திரம் 5 மணிக்கு
நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?

10. காலைல வந்ததுல இருந்து
ICICI Direct, gmail , Geogit,
செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal வொர்க் ன்னு சொல்றீங்க...?

ஏன் சார் ஏன்....

இத்த தான்...

திருக்குறள்ள

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்...

ஆப்பீசுக்கு போனா ஆணி புடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த மே
னேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.. நாங்களும் படிச்சிட்டு தான் வந்திருக்கோம் ........

No comments:

Post a Comment